Begin typing your search above and press return to search.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்பு
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார்.
HIGHLIGHTS
சென்னை, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கவிழா நடந்தது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 186 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழா, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.