/* */

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள்: பதிவாளர் எச்சரிக்கை

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள் செயல்படுவதாக காமராஜர் பல்கலை. பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

HIGHLIGHTS

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள்: பதிவாளர் எச்சரிக்கை
X

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள் செயல்படுதாகவும் அதை நம்பி ஏமாற வேண்டுமெனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) எம். சிவகுமார் வெளியிட்ட தகவல்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக்கான சேர்க்கை மையங்கள் என்று சட்டவிரோதமாக விளம்பரப்படுத்திக் கொண்டு சிலதனியார் நிறுவனங்கள் தேனியில் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தேனியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ளவர்கள் வசதிக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரியில்' மட்டும்தான் நடைபெற்று வருகிறது.உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தின் மாலை நேரக் கல்லூரியையோ (MKL-EVENING COLLEGE THENI) தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

போலியான, சட்ட விரோதமான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 July 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  3. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  6. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்