/* */

பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி

பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி
X

பைல் படம்.

சேலம் மாவட்டம், மேச்சேரி வெள்ளார் ஆட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கமணி (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில், பவானி அருகே குப்பிச்சிபாளையம் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மீது மோதியதில் தங்கமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்