/* */

அத்தாணி பவானி ஆற்றில் மூழ்கிய இளைஞர் மாயம்: தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்

அந்தியூர் அடுத்த அத்தாணி பவானி ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபரை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

அத்தாணி பவானி ஆற்றில் மூழ்கிய இளைஞர் மாயம்: தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்
X
சசிக்குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஊசிமலையைச் சேர்ந்த மாதேஷ் மகன் சசிகுமார் (22). இவர் தற்போது முனியப்பன் பாளையத்தில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பன் கவின்குமார் என்பவருடன் அத்தாணி- சவுண்டபூர் பாலம் அடியில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது நீச்சல் தெரியாததால் தண்ணீர் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் ஆப்பக்கூடல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தற்போது சசிக்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 18 Sep 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  3. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  4. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  5. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  6. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது