ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் மேம்பாட்டு பயிற்சி முகாம்
Erode news- ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பண்பாட்டு அறமன்ற உறுப்பினர்களுக்கான இளைஞர் மேம்பாட்டு பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பண்பாட்டு அறமன்ற உறுப்பினர்களுக்கான இளைஞர் மேம்பாட்டு பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது.
பாரத பண்பாட்டுக் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து பண்பாட்டு அறமன்ற உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் இளைஞர் மேம்பாடுப் பயிற்சி முகாம் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் சிந்தனை உரை வழங்கினார். கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ முகாமைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். பாரத பண்பாட்டுக் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் முகாமிற்கான முக்கிய உரையாற்றினார்.
இதனையடுத்து, மாணவர்களுக்கான பண்பாடு சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் முகாமிற்கான ஏற்பாடுகளை பண்பாட்டு அறமன்ற ஒருங்கிணைப்பாளர் தினகரன் மற்றும் பண்பாட்டு அறமன்ற பொறுப்பாளர் உமாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.