Begin typing your search above and press return to search.
அந்தியூர் அருகே மாணவிக்கு காதல் டார்ச்சர்; இளைஞர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கடந்த ஓராண்டாக பேசி வந்துள்ளார். இந்நிலையில், தனபால் சிறுமியை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது, இதனை சிறுமி அவரது தந்தையாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகளிர் போலீசார் தனபால் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.