/* */

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு; 46.2 மி.மீ மழை பெய்தது.

HIGHLIGHTS

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு
X

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலங்களில் வன விலங்குகளுக்கும், விவசாய பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த அணையின் முழு கொள்ளளவு 33.46 அடியாகும். கடந்த வாரம் முதல் வரட்டுப்பள்ளம் அணை சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையில் 30.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.82 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று இரவு பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் 46.20 மி.மீ மழை பொழிந்தது. இதேபோல் பொழிந்தால் வரட்டுப்பள்ளம் அணை விரைவில் நிரம்பும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 18 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  2. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  3. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  7. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!