ஈரோட்டில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.12ல் ஏலம்
Erode news- ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 12ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 12ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனம் மற்றும் 57 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 61 வாகனங்கள் ஆனைகல்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் அக்டோபர் 12ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
வாகனங்களை 11ம் தேதி மாலை காலை 10 மணி முதல் 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் 12ம் தேதி காலை 7 மணி முதல் காலை 10 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன்பணம் செலுத்தவேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதம் (ஜிஎஸ்டி) முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு அலுவலகத்தினை நேரடியாகவோ, 8523980906, 9585376421, 9498174688, 9976057118 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.