/* */

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதிய விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து
X

விபத்தில்,  நொருங்கிய காரின் முன்பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த ஒருவர், இன்று இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில், ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, ஆப்பக்கூடல் அடுத்த சக்தி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு சென்றபோது, அத்தாணியிலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதினார்.


இதில் கார் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபருக்கு கைகால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.காயமடைந்த நபரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய விசாரணையில், ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. மேலும், போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Feb 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து