Begin typing your search above and press return to search.
அந்தியூர் அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு
அந்தியூர் அருகே விவசாயி வளர்த்து வந்த கலப்பின பசு, இரு கன்றுகளை ஈன்றதை, அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து சென்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த எண்ணமலங்கலம், கோவிலூரைச் சேர்ந்தவர் செலம்பண்ணன் (51). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 5 கலப்பின பசுக்களை வளர்த்து வருகிறார்.
இதில், ஒரு பசுவானது, திங்கள்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டும் பெண் கன்றுகள். இதனை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.