ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் 23ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
Erode news, Erode news today - ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க, வருகிற 23ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க வருகிற 23ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சாலைச் சந்திப்பு மேம்பாடு செய்யும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேற்படி பகுதியானது ஜவுளி மற்றும் நகைகடைகள், பாதையோர வியாபாரிகள் நிறைந்த பொது மக்கள் அதிகம் கூடும் மிகவும் நெடுக்கடியான பகுதியாக இருப்பதால், மேற்படி பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது.
எனவே, மேற்படி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், இச்சாலைச் சந்திப்பை வாகனங்களும், பாதசாரிகளும் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வாகனப் போக்குவரத்தை சோதனை அடிப்படையில் தற்காலிகமாக மாற்றி அமைக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஈரோடு காவல்துறை சேர்ந்து முடிவு செய்துள்ளது.
இதற்காக திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையிலிருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிபாதையில் செல்லுமாறு வரும் 23ம் தேதி புதன்கிழமை முதல் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மறுவழியில் வரும் வாகனங்கள் ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக மீனாட்சி சுந்தரனார் சாலையில் இணையலாம் அல்லது மணிக்கூண்டு சந்திப்பைக் கடந்து பெரியார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீர் செல்வம் பூங்காவை அடையலாம். எனவே, பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் இப்போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.