/* */

பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை பார்வையிட 4வது ஆண்டாக தடை

ஆடிப்பெருக்கு விழாவான நாளை (ஆக.,03) பவானிசாகர் அணையின் மேல் பகுதி நீர்த்தேக்கத்தை பொதுமக்கள் பார்வையிட 4வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை பார்வையிட 4வது ஆண்டாக தடை
X

கழுகு பார்வையில், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி.

ஆடிப்பெருக்கு விழாவான நாளை (ஆக.,03) வியாழக்கிழமை பவானிசாகர் அணையின் மேல் பகுதி நீர்த்தேக்கத்தை பொதுமக்கள் பார்வையிட 4வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை, ஆடி, 18 ஒருநாளில் மட்டும் மக்கள் பார்வையிட, சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காகவே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள். அணையின் பரந்து, விரிந்த நீர்த்தேக்க பகுதியை பார்வையிட்டு மகிழ்வார்கள். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) 3ம் தேதி ஆடி 18 விழா கொண்டாடப்படுகிறது. மேலும், நாளை உள்ளூர் விடுமுறை என்பதால், அணையை சுற்றி பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது, அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு நாளான நாளை (வியாழக்கிழமை) பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பவானிசாகர் பூங்கா எப்பொழுதும் போல் முழுமையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு செல்ல தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த (2022) ஆண்டும், இந்த ஆண்டும் (2023) அணையின் நீர்மட்ட பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நான்காவது ஆண்டாக, நீர்தேக்கத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 2 Aug 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...