/* */

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

கொடிவேரி அணை.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், கோவை, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகப்படியான, உபரிநீர் திறந்ததால், கடந்த, அக்டோபர் 12ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், 75 நாட்களுக்கு பிறகு மீண்டும், டிசம்பர் 27ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல், தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிர் நிலவுவதால், நூற்றுக்கும் குறைவான பயணிகளே வந்ததாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 4 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?