/* */

அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய அனுமதியின்றி செம்மண்ணை ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
X

அனுமதியின்றி செம்மண்ணை கடத்தி வந்த லாரி.

அந்தியூர் அருகே ஒட்டபாளையம் கிராமத்தில், வி.ஏ.ஒ.,ஆக பணிபுரிந்து வருபவர், முருகானந்தம், நேற்று அதிகாலையில், வி.ஏ.ஒ.,முருகானந்தம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று, ஓலகடம் – காட்டூர் செல்லும் சாலையில், வேட்டுவனூர் எனும் இடத்தில் வந்து கொண்டு இருந்த போது, அதனை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த லாரியை ஓட்டி வந்ததாக, பிரம்மதேசம், அட்டக்கல்லூர் பகுதியை சேர்ந்த, சுந்தரராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வி.ஏ.ஓ.,அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்