/* */

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கணக்கம்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம்
X
தஞ்சமடைந்த காதல் ஜோடி.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி நகரை சேர்ந்தவர் சென்னியப்பன் மகள் சங்கீதா . பி.எஸ். பட்டதாரியான இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோபுரகண்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் வீட்டிற்கு தெரியவே அந்தஸ்து காரணமாக ஏற்க மறுத்தனர். அதனால், வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா காதலனுடன் நண்பர்கள் உதவியுடன் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து, கவுந்தப்பாடி போலீசார் இருதரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சங்கீதாவின் பெற்றோர் அந்தஸ்து காரணமாக ஏற்க மறுக்கவே கோபுரகண்ணன் பெற்றோர் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் காதல் ஜோடி கோபுரகண்ணன் வீட்டிற்கு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Jun 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்