/* */

அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது

அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது
X

கைது செய்யப்பட்ட ராசாத்தி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள நஞ்சமடைகுட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு சத்யா என்ற 18 வயது மகள் உள்ளார்.இந்நிலையில் வளர்மதிக்கும் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக வளர்மதி குருசாமியுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் குருசாமியின் மனைவி ராசாத்தி என்பவர் நஞ்சமடைகுட்டையில் உள்ள நடராஜன் வீட்டிற்கு சென்று உன் மனைவியால் தான் என் கணவர் வீட்டிற்கு வருவதில்லை எனக் கூறி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதில் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற அந்தியூர் போலீசார் சத்யாவின் சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணைக்கு பின்பு இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராசாத்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On: 21 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!