அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது
அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள நஞ்சமடைகுட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு சத்யா என்ற 18 வயது மகள் உள்ளார்.இந்நிலையில் வளர்மதிக்கும் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக வளர்மதி குருசாமியுடன் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் குருசாமியின் மனைவி ராசாத்தி என்பவர் நஞ்சமடைகுட்டையில் உள்ள நடராஜன் வீட்டிற்கு சென்று உன் மனைவியால் தான் என் கணவர் வீட்டிற்கு வருவதில்லை எனக் கூறி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதில் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற அந்தியூர் போலீசார் சத்யாவின் சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணைக்கு பின்பு இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராசாத்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.