ஈடிசியா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Erode news- ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈடிசியாவின் 2023-2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடந்தது.
தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் புதிய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி கூட்டத்தை வழிநடத்த, அதனை தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவினர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதன்படி, ஈடிசியா சங்கத்தின் 2023-2025க்கான புதிய தலைவராக ஸ்ரீதர், துணை தலைவர்களாக கந்தசாமி, பழனிவேல், ராம் பிரகாஷ் ஆகியோரும், சங்கத்தின் செயலாளராக சுரேஷ், இணை செயலாளர்களாக பரத், கார்த்திகேயன் ஆகியோரும், பொருளாளராக சரவணபாபு, இணை பொருளாளராக ஷரத் மனோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக 34 பேர் பதவியேற்று கொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.