/* */

பங்களாப்புதூர் அருகே கணவர் இறப்பில் சந்தேகம்: மனைவி புகாரால் பரபரப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே கணவர் இறப்பில் சந்தேகம் மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே கணவர் இறப்பில் சந்தேகம்: மனைவி புகாரால் பரபரப்பு
X

சூரியகுமார்

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அரச மரம் பஸ் ஸ்டாப் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சூரியகுமார் (50). லாரி டிரைவர் இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), மகள் ஒருவர் உள்ளார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் நேற்று வீட்டில் இறந்து கிடந்து உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தகவல் கிடைத்து உறவினர்களுடன் வந்த சூரியகுமார் மனைவி ராஜேஸ்வரி, தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கருதி, பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு அருகே ஆம்புலன்ஸில் சூரியகுமார் உடலை கொண்டு புகார் அளிக்க வந்தனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...