/* */

பிரம்மதேசம் பகுதி ரேஷன் கடையில் தரமற்ற கோதுமை: பொதுமக்கள் புகார்

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் தரமற்ற கோதுமை வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

பிரம்மதேசம் பகுதி ரேஷன் கடையில் தரமற்ற கோதுமை: பொதுமக்கள் புகார்
X

பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் கோதுமையில் கற்கள் இருப்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் 01ஆம் எண் கொண்ட நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மூலம் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கோதுமையில் பெரும்பாலும் சிறு கற்கள் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடையின் அலுவலரிடம் முறையிட்ட போது கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தரமான பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 May 2022 2:10 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்