/* */

கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி கல்லூரி மாணவர் பலி

கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

HIGHLIGHTS

கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி கல்லூரி மாணவர்  பலி
X

உயிரிழந்த மாணவன் யோகேஷ்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாணவர் யோகேஷ் (வயது 18). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் லிஜு என்ற மாணவனும் படித்து வருகிறார். அதே வகுப்பில் படிக்கும் 4 மாணவ நண்பர்களுடன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் 6 பேரும் நேற்று குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, யோகேஷ், லிஜு ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு மாணவர்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யோகேஷ் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். மாணவர் லிஜு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  3. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  4. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  5. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  6. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  7. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  8. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  9. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  10. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...