/* */

ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜை

கார்த்திகை 1 ம் தேதியை முன்னிட்டு ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் சிறப்பு பூஜை
X

ஐய்யப்ப சேவா சங்க கோயிலில் மாலை அணிந்து கொள்ளும் பக்தர்.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஐய்யப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து ஐய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கார்த்திகை 1-ம் தேதியான இன்று அதிகாலையிலேயே ஐய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் உள்ள கோயிலில் துளசிமணி மாலை அணிந்து இன்று விரதத்தை தொடங்கினார்கள். இதற்காக காலை 6 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 17 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு