Begin typing your search above and press return to search.
ஈரோடு: அத்தாணி ஓடைமேடு பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள ஓடைமேடு துவக்கப்பள்ளியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
தந்தை பெரியாரின் பிறந்த தினம், சமூக நீதி நாளாக, அரசால் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள ஓடைமேடு துவக்கப்பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுந்தரம் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து தீண்டாமை கொடுமை, பெண் அடிமைத்தனம், மூட நம்பிக்கை ஆகியவற்றிற்கு எதிரான பெரியாரின் பணிகளை கூறினர். பின்னர், தலைமையாசிரியர் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசித்தார். இதில், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.