ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16,578 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,578 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
So far 16,578 liquor bottles have been seized in Erode district | ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,578 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற இடங்களில் மது விற்பனை, போலி மது விற்பனை, போலி மது தயாரிப்பு இடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், நடப்பாண்டு இதுவரை மதுவிலக்கு தொடர்பாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,510 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 102 வாகனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 578 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல கஞ்சா கடத்தல், விற்பனை, பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக 53 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 90 பேர் கைது செய்யப்பட்டு, 116 கிலோ கஞ்சா, 1,200 போதை மாத்திரைகள், 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.