/* */

சத்தியமங்கலம் அருகே நோய்வாய்ப்பட்ட யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கெத்தேசால் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட பெண் காட்டு யானை உயிரிழந்தது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே நோய்வாய்ப்பட்ட யானை உயிரிழப்பு
X

நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த பெண் யானை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, தலமலை, ஜுர்கள்ளி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆசனூர் காவல் நிலைய சரகம், கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கெத்தேசால் குட்டை என்ற இடத்தில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட வனப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது துர்நாற்றம் வீசிய இடத்தில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, கேர்மாளம் வனத்துறை வனச்சரகர் தினேஷிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனசரகர் தினேஷ் இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து யானை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து வன கால்நடை மருத்துவர் சதாசிவம் நேரில் வந்து யானையை பிரேத பரிசோதனை செய்தார்.

Updated On: 30 March 2023 11:30 AM GMT

Related News