Begin typing your search above and press return to search.
அந்தியூர்: சிறுமியிடம் அத்துமீறிய பால் கடை உரிமையாளர் போக்சோவில் கைது
அந்தியூர் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற, பால் கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். பால் கடை உரிமையாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தகாத உறவு முறையில் பழகி, சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பால் கடை உரிமையாளர் தாமோதரன் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாமோதரன் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.