/* */

பவானி புதிய பேருந்து நிலையம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கை மீட்டெடுக்கும் வகையில், 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி புதிய பேருந்து நிலையம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி
X

மரக்கன்று நடும் விழாவில் எடுக்கப்பட்ட படம்

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கில் 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகத்தினர், கடந்த சில வருடங்களாக கொட்டி வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு அகற்றுமாறு வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது குப்பை கிடங்கை மீட்டெடுக்கும் வகையில் குப்பைகளை சுத்தம் செய்யப்பட்டு அப்பகுதியில் 250 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆணையாளர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் மா, வேம்பு, புங்கமரம் உள்ளிட்ட நாட்டு வகை மரங்கள் மட்டுமே நடவு செய்யப்பட்டு இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆண்டுகள் குப்பை கிடங்காக இருந்த பகுதி தற்போது மரம் வைக்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!