ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி
Erode news- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் மெகா தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.1) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடைபெற்றது.
அந்த வகையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் கவிதா ஆகியோர் தலைமையில் தூய்மை சேவை நிகழ்வு நடைபெற்றது. நாம் பணிபுரியும் அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வோம் என தூய்மைப் பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாக பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. இதில், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.