/* */

சலங்கபாளையம் 9வது வார்டு கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் இணைவு

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் நாச்சாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கே.சி.கருப்பண்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

சலங்கபாளையம் 9வது வார்டு கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் இணைவு
X

கே.சி.கருப்பண்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 9-வது வார்டு கவுன்சிலர் நாச்சாள்.

ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி 9-வது வார்டு கவுன்சிலராக சென்னி என்பவரது மனைவி திருமதி.நாச்சாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வார்டுக்கு உட்பட்ட அய்யங்காடு பகுதியில் இரண்டு தார் சாலைகள், கிருஷ்ணாபுரம் காலனியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி, 4 வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், பேரூராட்சி நிர்வாகம் 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், 9-வது வார்டு கவுன்சிலர் நாச்சாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் முன்னிலை அதிமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் நாச்சாள் கூறும்போது, கடந்த ஒரு வருடமாக 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எவ்வித வளர்ச்சி திட்ட பணியும் நடைபெறாத நிலையில், பல முறை கூறியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனாலேயே, அதிமுகவில் இணைந்ததாக கூறினார்.

Updated On: 1 July 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி