ஈரோடு மாவட்டத்தில், நாளை மறுநாள் (ஆக.,12) பொது விநியோக குறைதீர் நாள் கூட்டம்
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், சிறப்பு பொது விநியோக குறைதீர்க்கும்நாள் கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
ஈரோடு மாவட்டத்தில், பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்காவிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம்.
அதன்படி, ஈரோடு தாலுகாவில் ஐ.டி.ஐ. காசிபாளையம் ரேஷன் கடையில் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமையிலும், பெருந்துறை தாலுகாவில் சீனாபுரம் ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி தாலூகாவில் பள்ளியூத்து அவல்பூந்துறை ரேஷன் கடையில் ஈரோடு உதவி ஆணையாளர் (கலால்) தலைமையிலும், கொடுமுடி தாலுகாவில் நாகமநாயக்கன் பாளையம் ரேஷன் கடையில் பொது விநியோக திட்ட துணை பதிவாளர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் தாலூகாவில் பூசாரியூர் கோட்டுபுள்ளாம்பாளையம் ரேஷன் கடையிலும், நம்பியூர் தாலூகாவில் காவிலிபாளையம் 4 ரேஷன் கடையில் கோபி ஆர்.டி.ஓ. தலைமையிலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது.
மேலும் பவானி தாலுகாவில் ஊராட்சிக்கோட்டை ரேஷன் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும், அந்தியூர் தாலுகாவில் கொண்டையம்பாளையம் ரேஷன் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் தாலுகாவில் கோடேபாளையம் ரேஷன் கடையில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் தலைமையிலும், தாளவாடி தாலுகாவில் கெட்டவாடி ரேஷன் கடையில் கோபி பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும் முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.