ஈரோடு பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
HIGHLIGHTS
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
கோடை வெயில் கொளுத்துவதையொட்டி, ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பயணிகளுக்கு நீர் மோர், கம்பங்கூழ், தர்பூசணி பழம் போன்றவை வழக்கம் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில் துரையன் முன்னிலை வகித்தார்.
இதில் தொழிற்சங்க செயலாளர் குமார், மாநகர இணை செயலாளர் குணா, மாவட்ட மகளிர் அணி தலைவர் காஞ்சனா, செயலாளர் சத்யா, மாநகர மகளிர் அணி செயலாளர் தங்க மயில் மற்றும் நிர்வாகிகள் அன்னக்கொடி, சுப்பிரமணி, துரைசாமி, மருதமுத்து, தீபன், நல்லசிவம், ரஞ்சித், மாதேஷ், செண்பகம், மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.