/* */

ஈரோட்டில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆலோசனை
X

சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோட்டில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்படும். இந்தநிலையில் விளையாட்டு மைதானத்தில் செயற்கையிழை ஓடு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.

விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மைதானம் சீரமைக்கும் பணி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் உரிய இருக்கைகள் அமைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை மற்றும் பந்தல் அமைத்தல், காவல் பாதுகாப்பு பணி, விழாவை காண வரும் மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், மைதானத்தை சுற்றி அலங்கரித்தல், பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?