கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை மறுநாள் (ஜூலை 7) மின்தடை
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 7-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால், இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோபி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலைய பகுதி, மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், கொறவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.