ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்.,26) மின்தடை அறிவிப்பு
Erode news- ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 26) செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 26) செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 26) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டிப் பிரிவு தம்பங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பம்பாளையம், அத்தாணி, பெருமாபாளையம், குண்டுமூப்பனூர், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திராநகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவண்டப்பூர் ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், பெருமாள்கோயில்புதூர் மற்றும் அந்தியூர் குடிநீர் வினியோக்கப்படும் பகுதிகள்.
கெட்டிசெவியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கெட்டிச்செவியூர், வாகரைபுதூர், பள்ளிபாளையம், காளியப்பம்பாளையம், ஆவலாம்பாளையம், நிச்சாம்பாளையம், தோரண வாவி, ராசாகவுண்டம்பாளையம், தோட்டத்து பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், திருமநாதம்பாளையம், குட்டையபாளையம், சிறுவலூர், தாண்டாகவுண்டன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், பூச்சநாயக்கன்பாளையம், செரைகோயில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிப்பாளையம் மற்றும் ஊஞ்சபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.