/* */

ஈரோட்டில் சரக்கு ஆட்டோவை திருடியவர் கைது

சூரம்பட்டிவலசு பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடி, கரூர் சென்ற நபரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் சரக்கு ஆட்டோவை திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட ஜோதிகுமார்.

ஈரோடு மாவட்டம் கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சரக்கு ஆட்டோவை ஒட்டி வந்துள்ளார். ஜோதிகுமாரின் ஒழுங்கின நடவடிக்கைகளால், ரங்கநாதன் ஜோதிகுமாரை வேலையில் நீக்கி விட்டு, புதிய டிரைவராக, ராசு என்பவரை நியமித்துள்ளார்.

ராசு வேலையை முடித்துவிட்டு, கடந்த 2ஆம் தேதி வீரப்பம்பாளையம் பகுதியில் சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு, சாவியை வாகனத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், 3ஆம் தேதி காலை சென்று பார்த்தபோது, சரக்கு ஆட்டோ காணமால் போகவே இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசாரிடம் புகார் தெரிவிக்த்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், சரக்கு ஆட்டோவை சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை நோக்கி சென்ற ஜோதிகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு