/* */

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

அந்தியூர் காவல் நிலையம் பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிரம்மதேசம்பாலம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் ஆய்வு செய்ததில், அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் வீதியை சேர்ந்த லோகநாதன் (வயது 54) என்பவர் கேரளா மாநில லாட்டரி சீட்டினை வெள்ளை தாளில் எழுதி ஆசை வார்த்தை கூறி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, லோகநாதனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 May 2022 7:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  6. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  7. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...