Begin typing your search above and press return to search.
சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது
சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் பகுதியில் கஞ்சா பயிரிட்ட முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர்-கேர்மாளத்தை சேர்ந்தவர் மாதன் (77), இவர் குடியிருக்கும் வீட்டின் அருகில், புறம்போக்கு நிலத்தில் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். சோளம் பயிரிட்ட இடங்களில், ஆங்காங்கே கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடம்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மக்காச்சோள காட்டிற்குள் மாதன், கஞ்சா செடிகளை பயிரிடப்பட்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து, 2 கிலோ அளவிலான 490 கஞ்சா நாற்றுக்களை கைப்பற்றிய கடம்பூர் போலீசார், மாதன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து கோபி கோ்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.