/* */

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ ஜெயக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.

HIGHLIGHTS

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு
X

ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மன அளித்த எம்எல்ஏ., ஜெயக்குமார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிக்கு ஏற்கனவே உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்னியை நேரில் சந்தித்து பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

அந்த மனுவில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கடிதத்தில், பழைய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குன்னத்தூர் பகுதிக்கு வர வேண்டிய இரண்டு லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகத்தில் கடந்த ஆறு மாதங்களாக 10% தண்ணீர் கூட முறையாக வினியோகம் செய்ய வில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுண்டக்காம்பாளையம், செங்காளிபாளையம், சின்னேகவுண்டன் வலசு, விருமண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கடும் அதிருப்தியோடு குடிநீருக்காக தவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு