/* */

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 11 கோடியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்கம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவபட்டி, எல்லைக் கிராமம் ஊராட்சிகளில் பணிகள் தொடங்கியுள்ளன

HIGHLIGHTS

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 11 கோடியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்கம்
X

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவபட்டி மற்றும் எல்லைக் கிராமம் பகுதியில் திட்டப்பணியை தொடக்கி வைத்த அமைச்சர் மு.பெ. சாமிநாதன் 

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.11.04 கோடிமதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவபட்டி மற்றும் எல்லைக் கிராமம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.11.04 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நாரணவ்ரேமனிஷ் சங்கர்ராவ் முன்னிலையில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொது மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத் துறையின் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டம்) சார்பில் பசுவபட்டி ஊராட்சியில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் பூச்சக்காட்டு வலசு சாலை முதல் ஒட்டவலசு இணைப்பு சாலை வரையிலான சாலையினை மேம்படுத்தும் பணியும் மற்றும் எல்லைக் கிராமம் ஊராட்சியில் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் நொய்யல் சாலை முதல் பொன்னம் குட்டை சாலை (வழி) மேட்டூர் இளைகுமாரபாளையம் சாலை வரையிலான சாலையினை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.11.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. மேற்கொள்ளும் பணிகளை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு விரைவாக கொண்டு வர வேண்டுமென தொடர் புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநராட்சி 4-ம் மண்டல குழுத் தலைவர் இல.பத்மநாபன் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சிவராஜ்,உதவி பொறியாளர் அன்பரசி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் காயத்திரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியர் (பொ) அமுதா, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 May 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க