ஈரோட்டில் அமமுக சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Erode news- பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அமமுக சார்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS

Erode news- ஈரோட்டில் அமமுக சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Erode news, Erode news today- பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அமமுக சார்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அமமுக சார்பில், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார் ஏற்பாட்டில், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் தலைமையில், ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, தந்தை பெரியாரின் இல்லத்திற்கு சென்று இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அக்ரஹாரம் கிழக்கு பகுதி செயலாளர் நேரு, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் குமார், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவக்குமார் , மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரவணகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீலதா, மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஷக்தி சாலினி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஒயிட் சாதிக் மற்றும்,
மாவட்ட ஆண்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சரவணகுமார், வட்ட செயலாளர் பஷீர், வட்ட செயலாளர் மகேஷ்குமார், ஊராட்சி கழக செயலாளர் பச்சைமுத்து,எம்ஜிஆர் மன்ற தலைவர் அர்ஜுனன், மகளிரணி இணைச் செயலாளர் மாபு ஜான், சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் சையது, சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் அலாவுதீன்,மேற்கு மாவட்ட ஆண்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மகிலன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.