பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் எம்பி மூலம் அரசிடம் வலியுறுத்த முயற்சி
Erode news- பாண்டியாறு-மோயாறு திட்டத்தை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி செயல்படுத்த, ஈரோடு எம்பி கணேசமூர்த்தியிடம் பாண்டியாறு-மோயாறு இணைப்பு கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- பாண்டியாறு-மோயாறு திட்டத்தை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி செயல்படுத்த, ஈரோடு எம்பி கணேசமூர்த்தியிடம் பாண்டியாறு-மோயாறு இணைப்பு கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்கும் பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சியை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி பொதுமக்களின் குடிநீர், வாழ்வாதாரம் மற்றும் 4 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில், தென்மேற்கு பருவமழை பெய்யாத காலங்களில் கூட 2000 கன அடிக்கும் அதிகமான அளவு தண்ணீர் வீணாக கடலை நோக்கி செல்வதாக நேரில் பார்த்து வந்த பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்ட கூட்டமைப்பின் விவசாய பிரதிநிதிகள் திட்ட வரைவு ஒன்றை தயார் செய்தனர். இந்த சூழ்நிலையில் வீணாக கடலுக்குள் செல்லும் பாண்டியாற்றை - பவானிசாகருக்கு வரும் மோயாற்றுடன் இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டுகள் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் ஆசைதம்பி, கீழ்பவானி முறைநீர் பாசன சங்க கூட்டமைப்பு இணை செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்டோர் ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தின் சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படும் நன் மைகள், பாண்டியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் நேரடியாக வரும் தண்ணீர் விபரங்களை தெரிவித்தனர். இந்த இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி செயல்படுத்த கோரினர்.