/* */

கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்

அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை (24ந் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது

HIGHLIGHTS

கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்
X

கோப்பு படம்

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் உத்தரவின் பேரில், நாளை (24ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி ஊராட்சியில் சென்னிமலைகவுண்டன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகளாக கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நலவாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.

Updated On: 23 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்