ஈரோடு மாவட்டத்தில் 17 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், 17 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஈரோடு மாவட்டத்தில் 17 நகர்புற நலவாழ்வு மையங்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார்.
அதன்படி, ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், காணொலி வாயிலாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்துள்ளார். அதன்படி ஈரோடு மாநகர பகுதியில் ஒரு இடத்திலும், மாவட்டம் முழுவதும் 17 இடங்களிலும் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகர்ப் புற நலவாழ்வு மையத்திலும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு தூய்மை பணியாளர், ஒரு சுகாதார ஆய்வாளர் பணியாற்றுவார்கள். மாவட்டத்தில் உள்ள 17 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், சாதாரண மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய தயாராக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், நகர்நல அலுவலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.