Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு, நேற்று மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களுக்கு நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 673 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்தனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.