/* */

சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு
X

கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மோகனசுந்தரம். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (30). ஜவுளிக்கடை விற்பனையாளர். சம்பவத்தன்று, மோகனசுந்தரமும், கிருஷ்ணவேணியும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கங்காபுரம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள், இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.

இதில் கணவன், மனைவி இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தார்கள். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணவேனியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கிருஷ்ணவேனி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேனியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Updated On: 3 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  2. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  3. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  5. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  6. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  7. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  8. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  9. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு