சத்தி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ கிலோ ரூ.660க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.660-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சத்தி பூ மார்க்கெட்டில் இன்று  முல்லைப்பூ கிலோ ரூ.660க்கு விற்பனை
X

பைல் படம்.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.660-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதனை ஏலம் மூலம் வாங்கும் வியாபாரிகள் ஈரோடு மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி, இன்று (மார்ச்.19) ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வந்திருந்தனர்.

அதன்படி, இன்று (மார்ச்.19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.350 ,

முல்லைப்பூ - ரூ.660 ,

காக்கடா - ரூ.300 ,

செண்டுமல்லி - ரூ.100 ,

கோழிக்கொண்டை - ரூ.70 ,

கனகாம்பரம் - ரூ.250 ,

சம்பங்கி - ரூ.70 ,

அரளி - ரூ.80 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.150-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், தற்போது வெயில் அதிகரித்து வருவதால், முல்லைப்பூ செடிகள் கருகி வருகின்றன. இதனால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளது. தற்போது திருமண முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருவதால் தேவை அதிகரித்துள்ளது. விலையும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.

Updated On: 19 March 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்