/* */

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு: ஒருவர் கைது

அந்தியூர் அருகே உள்ள பாலகுட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சோமசுந்தரம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ்.காலனி பாலகுட்டை டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 55). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை 6 மணியளவில் வந்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த கந்தவேல் உறவினர்களுடன் தேடியதில், பாலகுட்டை ஆதிபராசக்தி கோயில் அருகே மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். உடனே அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பர்கூர் ஈரெட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (36) என்பதும், கடந்த 16 வருடங்களுக்கு முன்பு, கந்தவேல் வீட்டில் வேலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கந்தவேல் அளித்த புகாரில் பேரில் சோமசுந்தரத்தை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

Updated On: 14 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி