புதிய கலையரங்கத்தை திறந்து வைத்த மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி
மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்எல்ஏ சரஸ்வதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்எல்ஏ சரஸ்வதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி (2022-23) மூலம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமை வகித்து, கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வி இளங்கோ, பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், குளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவகுமார், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.