Begin typing your search above and press return to search.
கொடுமுடி பகுதியில் நாளை மின்தடை: மின் வாரியம் அறிவிப்பு
Power outage in Kodumudi area tomorrow
HIGHLIGHTS
ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கொடுமுடி துணை மின் நியைத்தின் பராமரிப்பு பணி காரணமாக 27.06.2022 (திங்கள் கிழமை) தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய பொறியாளர் ச.முத்துவேல் வெளியிட்ட தகவல்: கொடுமுடி 110/11 கே.வி.துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 27.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05:00 வரை மின் நிறுத்தம் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
அதன்படி, கொடுமுடி, சாலைபுதூர், குப்பம்பாளையம், இராசாம் பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம் பாளையம் வெங்கமேடு, அரசம் பாளையம், வடக்குமூர்த்தி பாளையம், சோளக்காளிபாளையம், ஆவடையார்பாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.