ஈரோடு: மொடக்குறிச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
government bus and heavy truck crash in erode-மொடக்குறிச்சி அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
HIGHLIGHTS
government bus and heavy truck crash in erode-ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள மண்கரட்டில் அரசு பேருந்து ஒன்று கனரக லாரியின் பின் புறத்தில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. பயணிகள் கூச்சலிட்டு அலறித்துடித்தனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இந்த வினாத்தாள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வெள்ளகோவில், ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.