/* */

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: கொடுமுடி அருகே பரபரப்பு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: கொடுமுடி அருகே பரபரப்பு
X

மண் கடத்தல் லாரியை கவிழ்த்து, அதிகாரியை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட, கொடுமுடி பி.எஸ்.என்.எல்  அலுவலகம் அருகேயுள்ள பகுதி. 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாமரைப்பாளையம் பகுதியில், இன்று ஈரோடு கனிமவள ஏ.டி சத்தியசீலன், உதவி புவியியலாளர் ஜெகதீஷ், ஆர்.ஐ. சிலம்பரசன் ஆகியோர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர்.

அந்த லாரியில், அனுமதியின்றி கிரேவல் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரியை போலீஸ் ஸ்டேசன் கொண்டு வருவதற்காக, ஆர்.ஐ.சிலம்பரசனை லாரியில் ஏற்றி விட்டு, லாரியின் பின்னால் ஜீப்பில் அதிகாரிகள் வந்து கொண்டு இருந்தனர். ஏற்கனவே லாரியில் இருந்த பாபு (எ) கெளதம் லாரியை ஓட்டி வந்துள்ளார். கொடுமுடி பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வரும்போது வேண்டுமென்றே சாலையின் இடதுபுறம் லாரியை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு லாரியில் இருந்து குதித்து வெளியே வந்தார்.

வெளியில் வந்த டிரைவர் கெளதமை, ஜீப்பில் வந்த அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது, அவர்களை மிரட்டி தாக்க முயற்சி செய்து விட்டு, முட்புதருக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார். லாரியின் உள்ளே இருந்த ஆர்.ஐ.சிலம்பரசன் வண்டி கவிழ்ந்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், விரைந்து வந்து தப்பியோடிய பாபு என்கிற கௌதமை தேடி வருகின்றனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தேடப்பட்டு வரும் கெளதம் சிறு வயதிலேயே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சமீபத்தில், ஒரிரு ஆண்டுகள் முன்பு வெளியே வந்தவர் என்பதும், சிறையில் இருந்து வந்த பின்பு லாரி வைத்து தொழில் செய்து வருவது தெரிய வந்தது.

மண் கடத்தல் குறித்து விசாரிக்கச் சென்ற அதிகாரியை கொலை செய்யும் நோக்கில், கடத்தல் நபர் லாரியை கவிழ்க்க முயன்ற சம்பவம், கொடுமுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 8 Jun 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்